The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: cozywallart.com


விரைந்திடும் வீரர்களே

கால்களில் வலுவேற்றி
நெஞ்சினில் உரமேற்றி

பாதங்களில் பலமேற்றி
பந்தினை உதைத்து

வெற்றி க்கனி பறிக்க
விரைந்திடும் வீரர்களே

நாட்டிற்கு நலம் சேர்க்க
நாடிடும் தோழர்களே

உலகே கண் விழித்து
உறங்காமல் காத்திருக்க

உற்சாகக் குரலெழுப்பி
உமை வாழ்த்திப் பாடுகையில்
நாங்களும் வாழ்த்துகிறோம்
பல்லாண்டு வாழ்ந்திடவே.....


கடவுள் ஆடுகிறான் கால்பந்து

உலக உருண்டையை எட்டி உதைத்து
கடவுள் ஆடுகிறான் கால்பந்து

அங்கே ...
ஆட்டம் முடிந்த பின்னரே
கூட்டம் கூடும் ..
அல்லல் ஓய்ந்த பின்னரே
அழுகை ஆகும் ..

அங்கும்
ஆரவார வெடிகள் உண்டு
ஆர்ப்பரிக்கும் ஓசை உண்டு
விளையாடுகிறவனும் அவனே
வேடிக்கைப் பார்ப்பவனும் அவனே....

உலக உருண்டையை எட்டி உதைத்து
கடவுள் ஆடுகிறான் கால்பந்து ..