Tamil Poem Picks
Poems
விரைந்திடும்
வீரர்களே
கால்களில் வலுவேற்றி
நெஞ்சினில் உரமேற்றி
பாதங்களில் பலமேற்றி
பந்தினை உதைத்து
வெற்றி க்கனி பறிக்க
விரைந்திடும் வீரர்களே
நாட்டிற்கு நலம் சேர்க்க
நாடிடும் தோழர்களே
உலகே கண் விழித்து
உறங்காமல் காத்திருக்க
உற்சாகக் குரலெழுப்பி
உமை வாழ்த்திப் பாடுகையில்
நாங்களும் வாழ்த்துகிறோம்
பல்லாண்டு வாழ்ந்திடவே.....
கடவுள்
ஆடுகிறான் கால்பந்து
உலக உருண்டையை எட்டி உதைத்து
கடவுள் ஆடுகிறான் கால்பந்து
அங்கே ...
ஆட்டம் முடிந்த பின்னரே
கூட்டம் கூடும் ..
அல்லல் ஓய்ந்த பின்னரே
அழுகை ஆகும் ..
அங்கும்
ஆரவார வெடிகள் உண்டு
ஆர்ப்பரிக்கும் ஓசை உண்டு
விளையாடுகிறவனும் அவனே
வேடிக்கைப் பார்ப்பவனும் அவனே....
உலக உருண்டையை எட்டி உதைத்து
கடவுள் ஆடுகிறான் கால்பந்து ..
|