Tamil Poem Picks
Poems
புத்தாண்டு
கனவு
புத்தாண்டில் உலகமெல்லாம்
புதுவாழ்வு பெறவேண்டும்
எத்திசையும் இன்புற்று
நல்வாழ்வு பெறவேண்டும்
ஏழைகளாய் செல்வர்களாய்
இருக்கின்ற நிலைமாறி
எல்லாரும் ஓர் நிலையாய்
உருவாகும் நிலைவேண்டும்
ஏசு நபி புத்தர்பிரான்
எடுத்துரைத்த தர்மங்களை
வழித்துணை யாய் கைக்கொண்டு
வாழ்கின்ற மனம் வேண்டும்
வன்முறையும் கொடுமைகளும்
மரைந்தெங்கும் ஒற்றுமையாய்
அன்புவழி மேற்கொண்டு
அறச்செயல்கள் செய்ய வேண்டும்
வான்முகில்கள் மழைதந்து
மண்ணுலகம் வளம்பெற்று
நான்மறையின் வழிபோற்றி
நல்வாழ்வு பெற வேண்டும்
பேராசை வேரறுத்து
பேராண்மை உளம்கொண்டு
ஓரணியாய் வாய்மையுடன்
உயர்வாழ்வு பெறவேண்டும்
|