Tamil Poem Picks
Poems
பூவே
பூவே உன் பொன்னுடலை
போற்றாத நாளில்லை
பூவையர்கள் உனைசூடி
மகிழாத பொழுதில்லை
தேவனவன் திருத்தோளை
நீ மகிழும் இடமாகும்
திருதோளைத் சேர்ந்ததனால்
உந்தனுக்குச் சிறப்பாகும்
ஆதவனின் தோற்றத்தில்
அகமகிழ்ந்து மலர்கின்றாய்
அகிலமெல்லாம் மகிழ்வுறவே
அன்போடு சிரிக்கின்றாய்
சாதனைகள் செய்பவரைச்
சார்ந்திடவே விளைகின்றாய்
சரித்திரம் படைத்தவரின்
சன்னதியில் மனகின்றாய்
|