The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

மகளிர் தின நலவாழ்த்துக்கள்

Image credit:littleabout.com

தொலைக்காட்சி வாழ்த்தியது, தொலைப்பேசி வாழ்த்தியது,
செய்தித்தாளில் மகளிர் சிரித்தனர்.
தினமும் மகளிரை போற்றத்தானே செய்கிறோம்,
பின் ஏன் தனியாக மகளிர் தினம் கொண்டாட வேண்டும்?
என சிந்திக்கும்போதே விடை கிடைத்தது என் மனைவியிடமிருந்து---

"இந்த நாளில் எங்களை நாங்கள் உணர்ந்திடச் செய்கிறீர்கள்,
எங்கள் ஆற்றலில் நம்பிக்கை உண்டாகிறது,
பலரின் அன்பை வாய்வழி உணர்கிறோம்,
மகளிர் சாதிக்கப் பிறந்தவர்கள் என்ற உறுதி பிறக்கிறது"
என்றாள
"என் இனிய மகளிர் தின நலவாழ்த்துக்கள்"
என்று வாழ்த்தினேன் நான்.


அவன் அருள்

நன்மையையும் தீமையும்
நம்மால் வருவதாகும்

உண்மையும் பொய்மையும்
உள்ளத்தின் தோற்றமாகும்

நட்பும் பகைமையும்
நாவாலே விளைவதாகும்

நன்மக்கட் பேரெல்லாம்
நல்வினைப் பயன்களாகும்

உன்னத வாழ்க்கைக்கு
ஒழுக்கமே மூலமாகும்

அன்பிற்கும் பண்பிற்கும்
ஆண்டவன் கருணையாகும்

எண்ணங்கள் செயல்களெல்லாம்
இறைவனின் சித்தமாகும்

ஆண்டவனின் அருட்செயலால்
அனைத்துமே அசைவதாகும்