Tamil Poem Picks
Poems
மகிழ்ச்சியின்
வெளிப்பாடு
வானம் வண்ணமிகு வானவில்லை உதிர்த்தது.
மலை பொங்கும் அருவியை கொட்டியது.
கடல் ஆர்ப்பரிக்கும் அலைகளை உருட்டியது.
பறவை படபடக்கும் சிறகுகளை விரித்தது.
பூ இனிய மகரந்தத்தை தெளித்தது--இப்படித்தான்
இவை எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.
மானிடர் மட்டும் என்ன விதிவிலக்கா?
எப்போதும் முகமலர்ச்சியோடும் புன்னகையோடும் இருப்பவர்கள் .
நித்யமகிழ்ச்சியை உணர்பவர்கள்!
|