The IndUS Network e-magazine

July Tamil Poem Picks
Poems

சோர்வைத் தொலைப்போம் ...
புலவர் மா.சடையான்டி

கற்பனை உலகில்
கனவு காண்போம்
விண்ணில் பறந்து
நிலவைத் தொடுவோம்
காற்றின் வேகத்தில்
கடிந்து செல்வோம்
ஆற்றின் ஓட்டத்தில்
மனதை செலுத்துவோம்
பறவையின் வாழ்க்கையால்
பாடம் பயில்வோம்
கடலின் அலைகளை
கற்பனை செய்வோம்
மீன்களில் துள்ளலில்
மகிழ்வை காண்போம்
மனதை மகிழ்ச்சியில்
குளிக்கச்செய்வோம்
சோர்வு என்பதே
தொலைந்து போகும்
ஆனந்தம் நெஞ்சில்
ஆர்ப்பறித்து எழும்


 

மனமே சோர்வு கொள்ளாதே
புலவர் மா.சடையான்டி

மனமது மகிழ்ச்சி பெற்றால்
உடலிலே எழுச்சி தோன்றும்
மனமது ஆர்வம் கொண்டால்
மலைகளும் கடுகாய் மாறும்
மனமது தெளிவு பெற்றால்
வெற்றிகள் நம்மைத் தேடும்
மனமது திண்மை பெற்றால்
சாதனை சொந்தம் ஆகும்