The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.arrl.org


இயற்க்கையின் சீற்றம்

வான் மழை பெய்தால்
மண் வளம் பெருகும்
வான் மழை பொய்த்தால்
மன்னுயிர் மயங்கும்
வான் மழை சீறி
பிரளய மானால்
மக்களின் வாழ்க்கை
அவலமாய் மாறும்
வாகனம் சாலை
வானுயர் மனைகள்
சேத மடைந்து
சிதறிடக் கூடும்
இறைவன் படைத்த
இன்னுயிர் எல்லாம்
உயிரைத் தொலைத்து
உடலாய் மிதக்கும்

எங்கும் ஓலம்
எங்கும் சோகம்
இறைவன் சன்னதி
இருண்டு போகும்
சுற்றமும் நட்பும்
துவண்டு நடுங்கும்
மயான அமைதி
மனதை சிதைக்கும்
இயற்க்கை சீற்றமா?
இறைவன் கோபமா?
ஏனிந்த கொடுமை?
ஏனிந்த நிலைமை?
எண்ணி பார்த்தால்
இதயம் வெடிக்கும்
தர்ம தேவனின்
தண்டனை இதுவோ?