Tamil Poem Picks
Poems
பனி
மழை
மண்ணுலக மக்களெல்லாம்
மாண்போடு வாழ்கவென
விண்ணுலகம் மகிழ்வுற்று
வெண்பனியால் வாழ்த்தியதோ?
வாழ்கின்ற காலம்வரை
வழமோடும் புகழோடும்
நலமோடும் வாழ்கவென
நல்வாழ்த்துக் கூறியதோ?
எண்ணங்கள் உயர்வானால்
ஏற்றங்கள் தேடிவரும்
என்பதனை உணர்த்துதல்போல்
பணிமலரைச் சொரிந்தனவோ?
இயற்கையின் வல்லமைக்கு
இணையில்லை அளவில்லை
மாற்றங்கள் காண்பதற்கு
மார்கங்கள் அறியவில்லை
காலத்தை கழற்றிவிட்டு
காட்சிகளை மாற்றுவித்து
ஆட்டுவிக்கும் இறையவனின்
ஆற்றலுக்கு ஈடேது
|