Tamil Poem Picks
Poems
பருவ
காலம்!
வெயிலென்னும் மலையென்னும்
பனியென்னும் புயலென்னும்
பருவத்தின் தோற்றம் போல்
வாழ்க்கையின் மாற்றங்கள்
இன்பத்தில் மகிழ்வதுவும்
துன்பத்தில் துவழ்வதும்
மண்ணுலக வாழ்கையிலே
மனம்காட்டும் கோலங்கள்
கதிரவனைப் படைத்தவனே
திங்களையும் படைத்திட்டான்
வாழ்கையின் தத்துவத்தை
வகுத்தவனும் இறைவனோ?
எண்ணத்தில் தெளிவோடு
இதயத்தில் மகிழ்வோடு
உண்மையை முதலாக்கி
உழைத்திட்டால் உயர்ந்திடலாம்
காலம் பேசியது
காவியங்களில் கண்பேச்சு
கதைகளில் கடிதப்பேச்சு
காலப்போக்கில் தொலைபேசிப் பேச்சு
காட்சி விரியும் கணிணிப்பேச்சு.
கடந்த காலம் இவை எல்லாமே
கைப்பேச்சு தான் இன்று எங்குமே--அதாவது
கைக்குகுள்ளே அடங்கும் "கைப்பேசி" பேச்சுத்தான் !!
|