அன்பு
அன்பில்லார் எல்லாம் தமக்கு என்பார்
அன்புடையார் என்றும் பிறர்க்கு என்பார்
வற்றல் மரம் கூட ஒருவேளை தளிர்க்கலாம்
அன்பிலார் வாழ்க்கை வழமை அடையாது
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாளென்று
எங்கள் வள்ளுவர் இயம்பிச் சென்றனன்
அன்பின் சிறப்பை அகிலம் மறந்தது
தன்னவப் பிடியில் சிக்கித் தவித்தது
கள்ளம் கபடம் கயமை சூது
எங்கும் வன்முறை எதிலும் சூழ்ச்சி
அன்பின் ஊற்று அற்றுப் போனது
அன்பிலா உலகம் அமைதி இழந்தது
அன்பின் சிறப்பை அகிலம் உணர்த்திய
அண்ணல் காந்தி ,ஏசு ,புத்தர்,
அன்னை தெரசா ,அருமை நபிகள்
என்று மறப்பர் இன்னல் நீக்கிட