Tamil Poem Picks
Poems
பெப்ரவரி-14
சென்ற வருடம் காதலர் தினம் கொண்டாடிய என்னவள்
இந்த வருடம் நண்பர்கள் தினம் கொண்டாடலாம் என்கிறாள்.
ஏன்? என்றேன்-அவளுக்கு கணவன் கிடைத்துவிட்டானாம்!!
அடுத்த வருடம் மீண்டும் காதலர் தினம் கொண்டாடலாம் என்கிறாள்
எப்படி? என்றேன்-அவரவர் வாழ்க்கைத்துணையோடாம் !!
காதல்
செய்வோம்
வண்ண மலரின் அழகினையும்
வானில் பறக்கும் புட்களையும்
எண்ணி லடங்கா மீன்களையும்
இயற்கைத் தாயின் எழிலினையும்
விண்ணில் தவழும் நிலவினையும்
விரைந்து ஓடும் நதியினையும்
காதல் செய்வோம் வாருங்கள்
களிப்புடன் என்றும் வாழுங்கள்
மண்ணில் ஒளிரும் கதிரினையும்
மலையில் வீழும் அருவியினையும்
கண்ணில் காணும் உயிர்களையும்
கருணை மிக்க மக்களையும்
அன்னை தந்தை மனைவியையும்
பெருமை சேர்க்கும் மகவினையும்
காதல் செய்வோம் வாருங்கள்
களிப்புடன் என்றும் வாழுங்கள்
|