The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

காவலன்

Image credit:http://www.birdseyefun-with-pictures.com

கண்ணுக்கு இமை காவலனாம்--உண்மை தான்
வெயிலோ, மழையோ, காற்றோ; குடையாக நிற்கிறான்,
வழி மறுக்கிறான்--என்றாலும்
கண்மடைதிறந்து வெள்ளம் கரைபுரளும்போது மட்டும்
அவன் ஏன் தடுப்பதில்லை?
கண்ணும் மனமும் பரிசுத்தமாகட்டும்
என்ற நல்லெண்ணத்தில் தானோ !